Friday 17th of May 2024 09:06:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய  சுகாதார வழிகாட்டல் இன்று வெளியீடு!

வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல் இன்று வெளியீடு!


கொவிட் தொற்றுநோயின்போது வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று வெளியிட்டார்.

அனைத்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்கள், மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு இது குறித்த சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், அவற்றின் நுழைவாயில்கள், காத்திருப்புப் பகுதிகள் மற்றும் மதத் தலங்களுக்கு வெளியே அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடக் கூடாது என புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்களின்படி, வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணக்கூடிவாறு அமைய வேண்டும். எனினும் அதிகபட்ச எண்ணிக்கை 50 பேருக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE